சூர்யா மீது அக்கறையாக இருக்கும் நந்தினி, சந்தோஷத்தில் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 24-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 24-04-25

நேற்றைய எபிசோடில் நந்தினி சிங்காரத்திடம் அருணாச்சலம் பற்றி பேசிக்கொண்டிருக்க சிங்காரம் நல்லபடியா பார்த்துக்கோமா என்று சொல்ல பாத்துக்குறேன்பா என்று சொல்லி ஃபோனை வைக்க சுந்தரவல்லி என்ன பாக்க போற, என்ன பார்த்து கிழிக்க போற, பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத குடும்பம் என் வீட்டுக்காரருக்கு சம்பந்தி ஆகி விடுவீங்களா நீ எதுக்கு இங்க வந்த என்று கோபமாக பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அருணாச்சலமும் சூர்யாவும் வந்து விடுகின்றனர். சுரேகா நந்தினியிடம் வம்பு இழுக்க சூர்யா பதிலடி கொடுக்க எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல நந்தினியும் கூட வர, நீ எதுக்கு வர நீ கெளம்பு என்று சொல்கிறார். சுரேகா நம்ம அப்பாவ பாத்துக்க மாட்டோமா அவ தான் பார்த்துபாலா என்று சொல்ல ஆமா நீ ஒன்னும் வேணா இன்னொரு கைய உடைப்ப என்று சூர்யா சொல்லுகிறார்.

உடனே நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்கடா டேய் நான் நந்தினி விட்டுட்டு வரேன் என்று நந்தினியை அழைத்துச் செல்ல சுந்தரவல்லி குடும்பத்தினருடன் வீட்டுக்கு செல்கின்றனர். உடனே அர்ச்சனாவின் பிரண்ட் இதுக்காக தான் என் கைய ஒடச்சியா என்று கேட்க இது மட்டும் சக்ஸஸ் ஆகட்டும் உனக்கு டைமண்ட்ல செயின் வாங்கி தரேன் என்று சொல்லி அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.நந்தினி அமைதியா இருக்கா என்று கேட்க, என் முகம் எப்படி இருந்தா என்ன சார் என்று சொல்ல, இப்போ அவங்க பேசறதுக்காக தானே நீ வருத்தப்பட்டு கிட்டு இருக்க என்று சொல்ல நீங்க பேசாம இருந்தாலே அவங்க அமைதியா இருப்பாங்க அவங்களுக்கு தான் என்ன புடிக்கல ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க தயவு செய்து என்னை விட்டுடுங்க என்று சொல்ல,அவங்கள விடு நந்தினி நீ உன் குடும்பத்து கூட சந்தோஷமா ஜாலியா இரு என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் அர்ச்சனாவின் அம்மா அர்ச்சனாவை நினைத்து புலம்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் அர்ச்சனா தோழியுடன் வீட்டுக்கு வருகிறார். அவர் கையில் கட்டு இருப்பதை பார்த்து அர்ச்சனாவின் அம்மா என்னம்மா கட்டு போட்டு இருக்க என்று கேட்க, பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன் என்று சொல்ல அதற்கு மினிஸ்டர் வழுக்கி விழுந்தால் காலில் அடிபடும் என்று கேட்க ,அர்ச்சனா நான்தான் கையை உடைத்து விட்டேன் என்று சொல்லுகிறார். சூர்யாவை வீட்டில் இருந்து வெளியே வர பிளான் பண்ண முதல்ல அதுக்கு அருணாச்சலம் கைய தான் உடைச்சேன் அவன் நேர ஹாஸ்பிடல் போய்ட்டா இப்ப நான் எப்படி ஹாஸ்பிடல் போவது அதுக்காக தான் இவ கையை உடைத்தேன் என சொல்ல மினிஸ்டர் மனைவி பதறுகிறார். உடனே அர்ச்சனா உள்ளே சென்று விட இவ கூட மட்டும் எனக்கு தயவுசெய்து விட்டுட்டு போகாதீங்க சூர்யாவுக்காக என்ன தல மேல அம்மிக்கல்ல கூட தூக்கி போட்டுருவா என்ன சொல்லுகிறார். சிங்காரம் காய்கறிகள் விலைவாசி அதிகமாக இருப்பது என்று சொல்லிக் கொண்டிருக்க, நந்தினி ஏதோ ஒரு யோசனையில் இருக்க, என்னமா யோசிச்சுகிட்டு இருக்க என்று கேட்டுவிட்டு ஐயாவை பத்தி தான் யோசிக்கிறேன்பா என்று சொல்லுகிறார்.

நான் அவங்கள பத்தி மட்டும் யோசிக்கல நம்ம குடும்பத்தை பத்தியும் தான் யோசிக்கிறேன் அவங்க அவங்க குடும்பமா சந்தோஷமா இருக்காங்க நம்ம மட்டும் அகதிகள் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கோம் என்று வருத்தப்படுகிறார். அதற்கு அம்மாச்சி ஏதோ ஒரு நேரம் ஊர விட்டு வந்துட்டோம் ஆனா இப்போ எல்லாரும் ஒன்னா இருக்கோம்னு சந்தோஷப்படு என்று சொல்கிறார். அதுவும் சரிதான் அம்மாச்சி என்று சொல்லுகிறார். தோட்டம் தொரவு வில்லாமல் நம்ம இங்கே என்ன பண்ணப் போறோம் என்று நந்தினி கேட்ட இங்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கட்டிடம்தான் இருக்கு யாரும் முகத்தை கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாங்க எல்லாமே ஒரே தெரு மாதிரிதான் இருக்கு என்று அம்மாச்சி சொல்கிறார். முதலில் இவளுக்கு ஸ்கூல், அவளுக்கு காலேஜ் இரண்டும் பார்க்கணும் என்று நந்தினி சொல்ல, புனிதா எனக்கு காலேஜ் வேண்டாம் நான் இப்போதைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன நந்தினியும் சரியென சொல்லுகிறார்.

சிங்காரம் புனிதாவுக்கு ஒரு நல்ல ஸ்கூல் பார்க்க சொல்லி அருணாச்சலம் ஐயா கிட்ட சொல்லலாமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம். அவங்களும் சூர்யா சாரும் நமக்கு நிறைய செஞ்சிட்டாங்க இதுவே போதும் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து நந்தினியின் அத்தை போன் போட்டு நடந்த விஷயங்களை பற்றி விசாரிக்க நந்தினி ஊரிலிருந்து வந்த விஷயத்தை சொல்லுகிறார். இப்ப எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று கேட்க, எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணுங்க ரஞ்சிதா ஸ்கூல்ல போய் டீசி மட்டும் வாங்க அனுப்புங்க என்று சொல்ல சரி வாங்கி அனுப்புறேன்மா என்று சொல்லிப் போனை வைக்கிறார். உடனே சிங்காரம் எல்லா பிரச்சனையும் அந்த கருப்பன் சரி பண்ணுவான் சமைக்கிற வேலையை பாருங்க என்று அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சூர்யா அருணாச்சலத்திற்கு வேட்டி கட்டிவிட்டு நீங்க யாரு சூர்யாவோட டாடி பெர்பெக்டா இருக்கணும் இல்ல என்று சொல்லுகிறார்.

சூர்யா அருணாச்சலத்தை அழைத்து வந்து உட்கார வைக்க சுந்தரவல்லி சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார் வலி இன்னும் இருக்காங்க என்று கேட்க கொஞ்ச நேரம் இருக்கு கொஞ்ச நேரம் இல்லை என்று சொல்ல உங்கள தான் ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க என்று சொல்ல நான் எதுவுமே பண்ணல சூர்யா தான் வேட்டி கூட கட்டி விட்டான் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ரேணுகா காபி கொடுக்க வருகிறார் உடனே சூர்யா உங்களுக்கு இந்த அடி எப்படிப்பட்டது அந்த நேரத்தில் நீங்கள் எதுக்கு வெளியே வந்தீங்க என்று கேட்க ஏதோ சத்தம் கேட்டது அதனால் தான் வந்தேன் என்று சொல்லுகிறார்.

திருடன் வந்துட்டான்னு ரேணுகா கத்தினதினால் தான் வந்தேன் என்று சொல்ல சூர்யா எழுந்து திருடன் வந்தானா என்று கேட்டால் ஆமாம் ஐயா என்று ரேணுகா சொல்லுகிறார். இவ திருடன் என கத்துனது உங்களுக்கு மட்டும் தான் கேட்டுச்சா என்று சொல்ல உடனே ரேணுகா திருடன் வந்த பயத்துல அய்யாவோட ரூம் முன்னாடி நின்னு கத்துனதுனால கேட்டிருக்கும் என்று சொல்ல, அப்போ ரூம்ல நீங்க மட்டும் தான் இருந்தீங்களா டாடி என்று கேட்கிறார் சரி அதை விடுங்க ரெண்டு திருடன் வந்திருக்காங்க அப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்த என்று கேட்க தண்ணீர் குடிக்க வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார் அப்போ டாடி எப்படி விழுந்தார் என்று சொல்லவே இல்லையே என்று கேட்க அருணாச்சலம் எண்ணெய் கொட்டி இருந்தது என்று சொல்லுகிறார் எண்ணெய் கொட்டியது எப்படின்னு உனக்கு தெரியாதா என்று திருடனுங்க கொட்டிட்டாங்க என்று ரேணுகா சொல்ல அப்போ திருடனங்க தட்டி விட்டதுல டாடி விழுந்துவிட்டார் அப்படித்தானே என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்திற்கு போன் போட கிச்சனில் சத்தம் கேட்டு அருணாச்சலம் போனை எடுத்து காதில் வைக்க,நந்தினி கல்யாணம் என நினைத்து பேச ஆரம்பிக்கிறார். கல்யாணம் அண்ணா வீட்ல தான இருக்கீங்க,நான் வீட்டுக்கு வர 2 நாள் ஆகும்,அதுவரைக்கும் வீட்டு வேலையை நீங்க தான் பாத்துக்கணும் ரேணுகாக்கு ஒன்னும் தெரியாது எல்லாத்தையும் உப்பு அள்ளி கொட்டிடவா அது இல்லாம சூர்யா சாருக்கு என்ன செய்யணும் என்ன புடிக்கும் என்று அவளுக்கு எதுவும் தெரியாது.

நான் தான் பார்த்து செய்வேன். நீங்கதான் கொஞ்சம் பாத்துக்கணும் உங்களுக்கே தெரியும் அவரு டெய்லியும் குடிச்சிட்டு வந்து ஒரு சில நேரம் போதையில் சாப்பிடாமயே படுத்து பாரு காலையில் எழுந்து தலை வலிக்குதுன்னு சொல்லுவாரு அவர கொஞ்சம் சாப்பாடு கொடுத்து படுக்க வைங்க சாப்பிட்டு கை கழுவாம படுத்துடுவாரு கைய கழுவிட்டு, வாய தொடைச்சிட்டு ஷூ,ஷாக்ஸ் கழட்டி விட்டுடுங்க காலையில வெதுவெதுப்பா சுடு தண்ணீர் கேட்பார் அதையும் வச்சு கொடுத்துடுங்க.இரண்டு நாளில் நான் ஓடி வந்தர்றேன் நான் சொல்றது கேக்குதா அண்ணே என சொல்லி நான் போனை வைத்து விடுகிறேன் என சொல்லி ஃபோனை வைக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 24-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 24-04-25