பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை.!

மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை சமீபமாகவே பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சொல்லியிருந்தார். கர்ப்பமாக இருந்த அவருக்கு தற்போது ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் அது தன்னுடைய குழந்தை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் பரவி வந்தது இது உண்மை இல்லை என அறிக்கையின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
அதாவது அவர் நான் ஜாயை தணிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன் இது மட்டுமில்லாமல் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பலமுறை மிரட்டியதால் இந்த திருமணம் நடந்தது மேலும் பெண்ணே கட்டாயப்படுத்தி என்னிடம் இருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாக சொல்லி செப்டம்பர் 2025 ஆயிரம் விளக்குகள் மகளிர் காவல் நிலையத்தில் புலனாய்வு அதிகாரி முன்பும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்திலும் விரிவான வாக்கு மூலங்களை நான் அளித்துள்ளேன்..
மேலும் ஒருபோதும் நான் டிஎன்ஏ பரிசோதனை அந்த குழந்தை என்னுடையது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் நான் கவனித்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த அறிக்கை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram