Lok Sabh Election Results 2019 :
சென்னை: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.542 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் , வேலூர் தவிர்த்து 38 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19 ம் தேர்தல் நடந்து முடிந்தது.
எல்லாமே தர லோக்கலா தெறிக்கும் – ஜி.வி-யின் டிவீட்டால் துள்ளிக்குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்!
முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்.
மேலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத், கட்காரி ஆகியோர் தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இதனால் அரசியல் களம் சூடு பிடித்தது..
இந்நிலையில் இன்று 23 ஆம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி,
தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 24 இடங்களிலும், அதிமுக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.,