அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர் லிங்குசாமி..!
அஞ்சான் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அஞ்சான் என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது.லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யா நடித்திருப்பார். சமந்தா,வித்யூட் ஜம்வால் சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் இயக்குனர் லிங்குசாமி. அதாவது ஒரு படத்தை ஓவராக பிரமோஷன் செய்யக்கூடாது என அஞ்சான் படத்துக்கு வந்த ட்ரோல்களை பார்த்து பலரும் உதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர் இன்றைக்கு இது எல்லோருக்கும் நடக்கிறது ஆனால் முதலில் என்னிடம் தான் தொடங்கப்பட்டது சோசியல் மீடியா ட்ரோலில் சிக்கிய முதல் பெரிய படம் அஞ்சான் தான் என் குடும்பம் நண்பர்கள் இல்லை என்றால் நான் சினிமாவை விட்டு எப்போது விலகி இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

