1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்..

நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர்.

பரத் கிருஷ்ண​ மாச்சாரி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சம்​யுக்​தா, நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர்​. இப்​படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​யுள்​ளது. இதன் படப்​பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இப்​படம் பிப்​ரவரி 13-ந்தேதி வெளி​யாக இருப்​ப​தாக ஏற்​கனவே கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், இது வரலாற்​றுப் படம் என்பதால் கிராபிக்​ஸ் வேலைகள் அதி​கம் இருக்​கின்​றன. இதனால்​, அது முழுமையாக முடிந்​த பின்​ வெளி​யிட படக்​குழு முடிவு செய்​துள்​ளது. இதனால்​, இப்​படம்​ ஏப்​ரல்10-ந்தேதிக்குத் தள்ளி வைக்​கப்​பட்​டு உள்​ளது.

suyambu tamil movie april month release

 

 

devotionstoryswayambu movieபரத் கிருஷ்ண​ மாச்சாரிவரலாறு