நந்தினி குடும்பத்தை பழிவாங்கும் சுந்தரவல்லி, அதிர்ச்சியில் சிங்காரம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

இன்றைய ப்ரோமோவில் என் தோட்டத்தில வேலை பார்த்துக்கிட்டு இருந்தவ எனக்கு எஜமானியா வர பாக்குறா, எவ்வளவு திமிர் இருந்தா என் சமையலறை வர வர பாப்பா என்று சொல்லுகிறார்.

உடனே சுதாகரை வைத்து அவர்களை வீடு காலி பண்ண செய்ய வைக்கிறார். சிங்காரம் நம்பாததால் சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போட இன்னும் ஒரு நிமிஷம் கூட அவங்க இந்த வீட்ல இருக்கக்கூடாது கிளம்ப சொல்ல அவர்களும் கிளம்புகின்றனர். இப்போ இவ எப்படி இந்த வீட்ல நிம்மதியா இருக்கானு நான் பாக்குறேன் என்று சுந்தரவல்லி சொல்கிறார்.

பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப் போகிறது என்ற பொறுத்திருந்து பார்க்கலாம்.

moondru mudichi serial promo update
Latest newsLatest updateMoondru Mudichinandhiniserial promosuriyaஅ. அன்பு ராஜாஅ.சுரேஷ் பாபுசன் டிவிமூன்று முடிச்சு ப்ரோமோ