வீடியோவுடன் காந்தாரா 2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளனர் பட குழுவினர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கிய நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ஹொம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜேஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்தத் திரைப்படம் வருகிறார் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக வீடியோ உடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.