நடிகர் விஷால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த நிகழ்வில் பேசிய உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது அவர் கூறியதாவது:
“என்கிட்டயும் தவறுகள் இருக்கு… அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த வயசிலும், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த அனுபவத்துடன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இது குற்ற உணர்ச்சியால் சொல்வது இல்லை, பொறுப்புடன் சொல்கிறேன்.
இனிமேல் நாம் செல்லும் பாதை சாதாரண பாதை அல்ல… அது நேர்மையான பாதை. அதில் எந்தக் குறுக்கு வழிக்கும் இடமில்லை. அந்த பாதையில் செயல்படும் போது, உங்களுக்கு முழுமையாக உறுதுணையாக இருப்பேன்.”
விஷாலின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.