இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிய சத்தம் போட்டுக் கொண்டிருக்க இங்கே வந்து நின்னு பேசுங்க என்று சபரி சொல்லுகிறார். உங்களுக்கு என்ன நான் இங்கதான் இருப்பேன் என பார்வதி சொல்லுகிறார். உடனே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இப்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி கலையரசனிடம் கனி அக்காவுக்கு மாஸ்டர் மைண்ட். எல்லாரையும் அவங்க சொல்றதை கேட்க வைக்கிறாங்களே அதுதான் மிகப்பெரிய அரசியல். தனக்கு எதிரா யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான் பாரு ரொம்ப விஷம் என்று சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.