அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. தற்போது அந்த சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தத் தொடரிலிருந்து வெளியேறிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இந்த நிலையில் அவருக்கு நடந்த டபுள் சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதாவது அவருக்கு இன்ஸ்டாகிராமில் 711k ரசிகர்கள் கிடைத்ததையும் அய்யனார் துணை சீரியல் 250 எபிசோடுகள் கடந்து இருப்பதையும் சேர்ந்து டபுள் ட்ரீட்டாக அவரே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.