குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ்,சுனில், திரிஷா, பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி உலக அளவில் 250 கோடியை நெருங்க இருக்கும் நிலையில் தற்போது அஜித் அடுத்த படத்திற்கான சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தியுள்ளார். அதாவது அடுத்த படத்திற்கு 175 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.