மனைவியின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய நடிகர் அமீர்கான்..!

மனைவியின் பிரிவு குறித்து நடிகர் அமீர்கான் உருக்கமாக பேசியுள்ளார்.


actor amirkhan latest speech viral

பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அமீர்கான் இவர் கஜினி, லகான், தங்கல்,பி.கே என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தனது முதல் மனைவியின் பிரிவு குறித்து பேசி உள்ளார். அதாவது என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் அதன் பிறகு தொடர்ந்து ஒன்றரை வருடம் தினமும் குடித்தேன் என்னால் தூங்கவே முடியவில்லை அதிகமாக குடித்ததால் சுயநினைவு இழந்து விட்டேன் என் உயிரை நான் மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


actor amirkhan latest speech viral
actor amirkhanactor amirkhan latest speech virallatest speechviralஅமீர்கான்கஜினிதங்கல்பி.கேலகான்