Dhruv vikram : விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.
மணிரத்னம் படத்தில இந்த முன்னணி ஹீரோ இல்லையாம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல் இதோ!
இதன் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகலில் நடைபெற்று வருவதாகவும் மேலும் 65% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளனர். ஆனால் பாலா விவகாரத்தில் நடந்தது தற்போதும் நடக்கிறதாம்.
அதாவது நடிகர் விக்ரம், இதன் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கு சென்று அதிக தலையீடு செய்கிறாராம். இதனால் இயக்குநர் தரப்பு விக்ரம் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம்.
என்னதான் அப்பாவாக இருந்தாலும் மகனுடைய படத்தில் இந்தளவு தலையீடு செய்தால் அவருடைய வாழ்க்கையே கெட்டுவிடும் என்று திரைத்துறையினர் புலம்பி வருகின்றனர்.
ஆதித்ய வர்மாவில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.