நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு கொஞ்சம் கருணை காட்டு கொரானா என கெஞ்சியுள்ளார் விக்னேஷ் சிவன்.
Vignesh Shivan Request to Corona : கொரானா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தமிழகத்தில் இதன் ருத்ரதாண்டவம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று பிரதமர் இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றி உங்களின் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.
முதல் முறையாக தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!
மக்களும் அதற்கேற்றார் போல இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் லைட் ஆகியவைகளை ஏற்றி வைத்து இருந்தனர்.
நடிகை நயன்தாராவும் இதை பின்பற்றியுள்ளார். இந்தப் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொஞ்சம் கருணை காட்டு கொரானா என குறிப்பிட்டுள்ளார்.