Thalapathy 63 Story : தளபதி 63 படத்தின் கதை என இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அட்லீ பாலிவுட் கதையை சுட்டு விட்டார் என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த கதை வித்தியாசமாக உள்ளது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விஜயும் கதிரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். இவர்கள் இணைந்து விளையாடி பல பரிசுகளை வென்றுள்ளனர்.
வைரல் வீடியோ : தளபதி 63 படப்பிடிப்பில் குவிந்த பெண்கள் – விஜய் செய்ததை பாருங்க.!
அதன் பின்னர் இருவருமே கோச்சராகி விட ஒரு நாள் கதிர் மர்மமான முறையில் கொல்லப் படுகிறார். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் மெத்தனமாக இருக்கின்றனர்.
இதனால் விஜயே களத்தில் இறங்கி தன்னுடைய நண்பனின் கொலைக்கு என்ன காரணம் என ஆராய்கிறார். பல திடுக்கிடும் உண்மை வெளியாகின்றன. சம்மந்தப்பட்டவர்களை எப்படி பழி வாங்குகிறார்?
கதிரின் டீமிற்கு பயிற்சியாளராகி அந்த டீமை எப்படி வெற்றி பெற செய்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அட்லீ பாலிவுட் கதையை சுட்டுட்டாரு என சொல்லி வந்தாங்க. ஆனால் இது வித்தியாசமாக இருக்கே என கூறி வருகின்றனர்.