Tamil Nadu Government Latest Announcement on Lockdown
Tamil Nadu Government Latest Announcement on Lockdown

தமிழகம் முழுவதும் வீடு கிட்டத்தட்ட முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவது போல உத்தரவை பிறப்பித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

Tamil Nadu Government Latest Announcement on Lockdown : சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாஸ் அணிந்தபடி மருத்துவமனையில் ஷாலினியுடன் தல அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதாவது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கார், இருசக்கர வாகனம், தனியார் பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் பால், காய்கறி, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகளுக்குச் செல்லும் போது கட்டாயம் தனி மனித இடைவெளியை பயன்படுத்தி ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஒரு ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயம் தேவை எனவும் அறிவித்துள்ளார்.

மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பகுதியில் உள்ள மக்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.