தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்துவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stalin wants to appreciate edappadi palanisamy – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28ம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரவே இந்த பயணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் திட்டமிட்டார். அங்கு பல தொழிலதிபர்களையும் அவர் சந்தித்து பேசினார். பல ஒப்பந்தங்களும் போடப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
3-வது முறையாக இணையும் மெகா ஹிட் கூட்டணி – தலைவர்168 இயக்குனர் அப்டேட்.!
இந்நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத்திருமண விழா இன்று திருப்பூரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எந்த ஊரில் எந்த நிறுவனம் என அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டமன்றத்திலேயே 2 முறை பேசியுள்ளேன். தற்போது அமெரிக்க சென்று அவர் ரூ.2780 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருகிறது. முதலீடுகள் வந்தால் பாராட்டுகிறோம். முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் எனில் அவருக்கு பாராட்டு விழா நடத்தவும் தயாராக இருக்கிறோம். ஆனால் அது வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.