ஜோதிகா பேசியதில் என்ன தப்பு என்று வெளுத்து வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.
SR Prabhu Comment On Jyothika Issue : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டனர் ஜோதிகா. திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் தற்போது அடுத்த இன்னிங்சை தொடங்கி நல்ல நல்ல படங்களாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமான கோவில் அங்கு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினார். அதன் பிறகு நான் ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையின் நிலை கொண்ட மோசமாக இருந்தது.
இதனால் கோயில்களில் உண்டியலில் காசு போடுவது போல மருத்துவமனை, பள்ளி மேம்பாட்டுக்கு செலவு செய்யுங்கள் என பேசினார்.
ஆனால் ஜோதிகா பேச்சு வேறு விதமாக திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து தற்போது எஸ். ஆர் பிரபு பதிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் #Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀 என கூறியுள்ளார்.
#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀
— SR Prabu (@prabhu_sr) April 24, 2020