soolur
2 பெண்களை திருமணம் செய்து சித்ரவதை செய்துவிட்டு 3வது திருமணத்திற்கு தயாரான நபரை முதல் 2 மனைவிகளை நைய்யப்புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Soolur Man attacked by wives who tried for third marriage – கோவை மாவட்டம் சூலூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ்(26). இவர் ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினிக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது..

ஆனால், திருமணமான 15 நாட்களிலேயே பிரியதர்ஷனியை அரவிந்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பின் கணவரை பிரிந்த பிரியதர்ஷினி தற்போது திருப்பூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

soolur

அதன்பின், அரவிந்த் இணையத்தில் மேட்ரிமோனி வலைதளம் பெண் தேடி, தான் ஏற்கனவே திருமணமானவன் என்பதை மறைத்து அனுப்பிரியா(23) என்கிற பெண்னை கடந்த ஏப்ரல் 10ம் தேதி 2வது திருமணம் செய்துள்ளார்.

அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையுள்ளது. ஆனாலும், அதற்கு சம்மதித்தே அரவிந்த் அவரை திருமணம் செய்தார்.

அதன்பின் அவரையும் அரவிந்த் சித்ரவதை செய்துள்ளார். அவரின் குழந்தையை சூடு வைத்து கொடுமை படுத்தியுள்ளார். எனவே, அவரும் தனது தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட்.. இவ்வளவு கவர்ச்சியா? – வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில், மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட்ட அரவிந்த் மீண்டும் திருமண வலைத்தளத்தில் பெண் தேடியுள்ளார்.

இதை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா இருவரும் காவல் நிலையம் சென்றனர். போலீசாரின் விசாரணைக்கு அழைத்ததன் பேரில் அலுவலகத்தில் இருந்து அரவிந்தன் வெளியே வந்த போது அவரை முதல் 2 மனைவிகளும் அடித்து உதைத்தனர்.

போலீசார் அங்கு வந்து மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.