ரோகினி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

ரோகினி பற்றிய உண்மையை முத்து தெரிந்து கொண்டுள்ளார்.

siragadikkaaasai serial today episode update 06-01-25
siragadikkaaasai serial today episode update 06-01-25

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் முன்னாள் கணவருடைய அண்ணனும் அவரது மனைவியும் டிரீட்மென்ட்காக வந்திருக்கின்றனர் அப்போது முத்துவிடம் போட்டோ பிரேம் போன்ற கடைக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல அவரும் கூட்டி செல்கிறார். மறுபக்கம் ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உடனே அவரது பிஏ ஒரு இம்பார்ட்டனான விஷயம் சார் மும்பையில ரொம்ப வயசானவங்க குழந்தை அடாப்ட் பண்ண பார்க்கிறாங்க அவங்க 25 லட்சம் வரைக்கும் கொடுக்க ஒத்துக்கிட்டு இருக்காங்க இன்னும் நம்ம புஷ் பண்ணுனா அதிகமா குடுப்பாங்க நீங்க வேணா கிரிஷ் அவங்களுக்கு தத்து கொடுத்துடுங்க என்று சொல்ல மனோஜ் இது நல்லா ஐடியா தான் என்று யோசிக்கிறார்.

Web Ad 2

இதனைக் கேட்ட ரோகிணி இதெல்லாம் சரிப்பட்டு வராது முத்து ஏதாவது சொல்லுவாங்க அங்கிள் திட்டுவாங்க என்று சொல்ல நீ எதைப் பற்றியும் யோசிக்காத ரோகினி அவங்க கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு தெரியும் என்று முத்து சொல்ல ரோகினி கண்கலங்குகிறார். மறுபக்கம் ஸ்டூடியோவுக்கு வந்து காரை நிறுத்த அவர் மட்டும் சென்று போட்டோவை பிரேம் போட கொடுக்கிறார் முத்து அவரது மனைவியுடன் காரில் பேசிக் கொண்டிருக்க அப்போது அவருக்கு போன் வருகிறது உடனே அதனை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோ ரூமுக்குள் என்று கொடுக்க அவர் போன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்போது முத்து ரோகினியின் முதல் திருமணம் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார். உடனே அவர் வந்து விட இது யார் சார் என்று கேட்கிறார் உடனே இவர் தான் என்னோட தம்பி இது அவரோட மனைவி கல்யாணி என்று சொல்லுகிறார். அன்னிக்கு கல்யாணத்துல பார்த்தீங்கள கிரிஷ் அது கல்யாணியோட பையன் தான் இது அவர்களுடைய அம்மா இப்போ கல்யாணிக்கு இரண்டாவது கல்யாணம் ஆகி சென்னைல தான் இருக்கா என்று சொல்ல முத்துவிற்கு அனைத்து உண்மையும் தெரிய வருகிறது.

மறுபக்கம் மீனா தோழிகளிடம் பூ கட்டி கொண்டு இருக்க சோகமாக இருக்கிறார் என்னாச்சு என்று கேட்க குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனையா போய்கிட்டு இருக்கு இல்ல அதனால தான் என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி வந்து மீனாவிடம் எனக்கு ஏழு நாள் கண்டிப்பா பத்தாது என்று சொல்ல அப்ப 70 வருஷம் கொடுக்கட்டுமா என்று கேட்கிறார் எனக்கு அதெல்லாம் தெரியாது நீ சொல்லித்தான் ஆகணும் இல்லனா நான் சொல்லிடுவேன் என்று சொல்ல நான் முதல்ல மனோஜ் கிட்ட மட்டும் சொல்றேன் மனோஜ் என்ன புரிஞ்சுகிட்டா கூட எனக்கு போதும் என்று சொல்ல அதற்கு மீனா என்ன சொல்லுகிறார்?முத்து என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 06-01-25
siragadikkaaasai serial today episode update 06-01-25