முத்து செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. செல்வத்தால் அருண் அம்மாவுக்கு நடந்து விபத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

முத்து மற்றும் செல்வத்துக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

siragadikkaaasai serial today episode update 02-02-26
siragadikkaaasai serial today episode update 02-02-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பிரகாஷ் என்பவரை ஷோரூமுக்கு அழைத்து வந்து இவரும் நிறைய பில்டர்ஸ் உருவாக்கிட்டு இருக்காரு 100 அவன் கேட்கிறார் என்று மனோஜிடம் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் கலெக்ஷன்களை காட்டச் சொல்லுகிறார் ரோகிணி அவருடன் சிரித்து பேசுவதால் மனோஜ் கடுப்பாகிறார் அவர்கள் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும்போது ரோகினி நான் இருக்கட்டுமா போகட்டுமா மனோஜ் என்று கேட்க கிளம்பு என்று சொல்லுகிறார் அக்கவுன்ட்ஸ் எல்லாம் இன்னும் வரல என்று சொல்ல ரோகிணி நான் போயே ஆகணுமா என்று சொல்ல நீ போறியா நான் போகட்டுமா என்று கேட்க நானே போறேன்னு சொல்லிவிட்டேன் சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா ஸ்ருதி வீட்டுக்கு சென்று நடன விஷயங்களை சொல்லுகிறார்.

உடனே ஸ்ருதியின் அப்பா அம்மா என்ன பண்ணாலும் நம்ம மேல தான் பழி விழும் என்று சொல்லுகின்றனர். ரவி இவர்தான் பண்ணாருன்னு இவர் மேல கோவமா இருக்காரு என்று சொல்ல அப்படியே பண்ணி இருந்தாலும் முத்து பண்ணது கரெக்ட் தான் என்று ஸ்ருதியின் அம்மா சொல்ல மீனா அவர்தான் பண்ணலன்னு சொல்றேன்ல என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதியும் முத்து அப்படி பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்லுகிறார் இப்போ ரவி எங்கே என்று கேட்க அவர் நீத்துவை பார்க்க போயிருக்காரு என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதியிடம் நீ ரவிய விட்றாத சுருதி அவருக்கு போன் பண்ணி பேசு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கார் ஷெட்டில் முத்து சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் செல்வம் வருகிறது எதுக்குடா வர சொன்ன என்று கேட்டால் ரவி கோபமாக நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார்.

அவன் எப்பவுமே இப்படி பண்ண மாட்டாரே என்ன ஆச்சு என்று கேட்க நீத்து விஷயத்தை சொல்ல அந்த திமிரு புடிச்ச பொண்ணுக்கு இப்படி நடந்தது தான் கரெக்ட் தப்பே கிடையாது என்று சொல்ல, நீ இவ்வளவு உறுதியாக சொல்றத பார்த்தா நீ ஏதாவது பண்ணிட்டியா என்று கேட்க என் மேலேயே சந்தேகப்பட்டுட்டியா என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆமாண்டா நீ தான் அவசரப்பட்டு பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைக்கெல்லாம் கை வைப்ப அது மாதிரி குடிச்சிட்டு போய் ஏதாவது பண்ணிட்டியா என்று சொல்ல எல்லாரும் சொல்ற மாதிரி நீ சொல்லாதடா ஏற்கனவே நான் வருத்தத்துல இருக்கேன் என்று சொன்ன இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போ நீ சொன்னது தப்புன்னு ஒத்துக்க மாட்டல்ல என்று செல்வம் கேட்க என் கண்ணே இதுல இருக்காத போயிடு என்று முத்து சொல்ல செல்வம் வேகமாக கார் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். உடனே முத்துவின் நண்பர்கள் இவன் என்னடா இப்படி பேசிகிட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்க மறுப்பக்கம் மீனா பூ கொடுத்துக்கொண்டிருக்க அவர் என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்மா நீ தான் டெக்கரேஷன் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்..

அந்த நேரம் பார்த்து ஆக்சிடென்ட் நடக்கிறது மீனா சத்தம் கேட்டு பதறிப் போய் பார்க்க உள்ளே காரில் செல்வம் இருக்கிறார் பிறகு அருண் அம்மா காரில் அடிபட்டு இருக்க ஒரு நர்ஸ் செக் பண்ணி பார்த்து இறந்து விட்டதாக சொல்லுகிறார். மீனா என்ன சொல்லுகிறார்? முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 02-02-26
siragadikkaaasai serial today episode update 02-02-26