Sasikumar About Mundhanai Mudichu 2
Sasikumar About Mundhanai Mudichu 2

முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என சசிகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sasikumar About Mundhanai Mudichu 2 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வலம் வருபவர் பாக்யராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு.

மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை 31 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பாக்யராஜுடன் 12 வருடங்கள் பணியாற்றிய பாலாஜி பால்ராஜ் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தை இயக்க சசிகுமார் நடிக்க உள்ளார். ஜே எஸ் பி சதீஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் சசிகுமார் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என கூறியுள்ளார்.

ஒரே கேள்வியால் விஜயை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த சிவகார்த்திகேயன் – திருதிருவென முழித்த தளபதி.!

முந்தானை முடிச்சு படத்தை இந்த கால இளைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் தான் இந்த படத்தை ரீமேக் செய்யும் ஆசை வந்தது.

மேலும் இது முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் தானே தவிர பார்ட்-2 இல்லை. மேலும் இப்படத்திற்கு டைட்டிலும் முந்தானை முடிச்சு தான்.

இதை விட ஒரு சிறந்த டைட்டில் இப்படத்திற்கு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த முந்தானை முடிச்சு 2 படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பதையெல்லாம் படக்குழு வெகுவிரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.