Ramaniyammal : சரிகமப ரமணியம்மாள் தனக்கு இன்னமும் பரிசு நிலம் கைக்கு வரவில்லை என பேட்டி ஒன்றில் கூறி தன்னுடைய பரிதாப நிலையை கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரமணியம்மாள்.
இளசுகளின் கனவு கன்னி மீரா ஜாஸ்மினா இது? – தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க!
63 வயதிலும் ஒருவரால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியவர். படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தும் தற்போது வரை தான் செய்து வரும் வீட்டு வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரபல பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் பேட்டி எடுத்த போது சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக விவசாய நிலம் பரிசாக வழங்குவதாக அறிவித்தனர்.
அதோடு பரிசு தொகை 5 லட்சத்தை தன்னுடைய 7 பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவசாய நிலம் பற்றி ஜீ தமிழ் டிவி சேனல் கூறியதாவது இந்த பரிசை வழங்குவதாக சொன்ன ஸ்பான்சர் நிறுவனம் நடைமுறைப்படி நடந்து கொள்ளவில்லை. அதனால் தான் இந்த தாமதம் எனவும் ரமணியம்மாவுக்கு விவசாய நிலத்தை வாங்கி கொடுக்கும் முழு பொறுப்பு எங்களுடையது எனவும் கூறியுள்ளது.