PT Selvakumar Build Sri Kubera Mahal : இந்தியாவில் பிரசித்தி பெற்ற மருந்துவாழ்மலை குமரி மாவட்டத்தில் உள்ளது.
இந்த மலையில் 68000 மூலிகைகள் இந்த தியான மண்டபத்திற்கு வந்தடையும் வகையில் கட்டப்பட உள்ளது .
பழங்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் முதல் மற்ற எல்லா ராஜாக்களுக்கும் இந்த மூலிகை தான் மருந்தாக பயன்பட்டுள்ளது .சித்தர்கள் பலரும் இங்குள்ள மூலிகை மூலமாகத்தான் பல மருந்துகள் கண்டுபிடித்துள்ளார்கள் .இப்படி அரிய அம்சங்கள் பொருந்திய மருந்துவாழ்மலைக்கு எதிர்புறம் உள்ள ஐயன் மலையில் ஸ்ரீ குபேர தியான மண்டபத்தை கலப்பை மக்கள் இயக்கம் PT செல்வகுமார் கட்டுகிறார். குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலிருந்து வரும் மக்களுக்கும் அதிசயமும் அற்புதமாக விளங்கும் இடமாக திகழும் ..
மலையின் அற்புதங்கள் :
விஜய் அழைத்தால் நான் ரெடி, ஆனால்?? தளபதியுடன் இணைவது பற்றி வெற்றிமாறன் ஓபன் டாக்
இந்த தியான மண்டபத்தில் தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம். அத்துடன் ஆரோக்கியம், புத்துணர்ச்சி, நிம்மதி, தீரா நோய் அனைத்தும் தீர்க்கும் ஒரு அமைதியான இடமாக இருக்கும். இந்த மலையை சுற்றி வாழும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவர்களுக்கு ஆஸ்துமா நோயோ, கேன்சரோ இல்லை.
மேற்கில் மலையும், கிழக்கில் ஆறும் மற்ற பகுதிகளில் மரங்களும் சூழ்ந்த இந்த இடம் மனம் கொள்ளை கொள்ளும் ஒரு அமைதி பூங்கா. இந்த திருப்பணியில் நடிகர் ஹரிஷ் கல்யாண், ஐயன்மலை தியாகராஜ சுவாமிகள், பேராசிரியர் ரெங்கநாயகி, கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், குமரி மாவட்ட தலைவர் சிவபன்னீர், அழகை காப்பித்துரை, காணிமடம் தனசேகர், கால்நாட்டுவிழாவுடன் தொடக்கப்பட்ட இந்த பணி இந்த மாதத்தின் இறுதிக்குள் நிறைவு பெற உள்ளது. திரைப்பட நடிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வை பாராட்டி வருகிறார்கள் ..
பிரபல இயக்குனரும் விஜய் புலி பட தயாரிப்பாளருமான PT செல்வகுமார் கட்டுகிறார்.