அசிங்கமா பேசுற இத்துடன் நிறுத்திக்கோங்க என ரசிகர்களை எச்சரித்து பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
Priya Bhavani Shankar Warned Her Fans : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல் நடிகை ஆகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் பிரியா பவானி சங்கர்.
இந்தியன் 2ல் நடிப்பது பற்றி பதிவிட்ட பிரியா பவானி ஷங்கர் – வாழ்த்து மழையில் நனைக்கும் ரசிகர்கள்.!
சினிமாவில் மேயாதமான் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் பெண்மணி ஒருவர் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் தாக்கிப் பேசி என்றால் அதற்கு அவர் சரியான விளக்கம் கொடுத்தும் அந்தப் பெண்மணி ஏற்பதாக இல்லை.
இதனால் பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் பலரும் அந்த பெண்மணியை தாக்கிப் பேசி வந்தனர். சிலர் அசிங்கமாகவும் பேசத் தொடங்கினர்.
இதனால் கடுப்பான பிரியா பவானி சங்கர் நமக்கு அந்தப் பெண்ணை அசிங்கமாக பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. எனக்காக சப்போர்ட் செய்வதாக கூறி அந்தப் பெண்மணியை திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்மணியை திட்டுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.