வனிதாவிற்கு நேற்று மூன்றாவது திருமணம் நடந்து முடிந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Police Complaint on Vanitha‘s 3rd Husband : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா சந்திரலேகா படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.
பிக் பாஸுக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார். இதனையடுத்து தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்து வரும் பீட்டர் பால் என்பவரை நேற்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடந்து முடிந்த நிலையில் பீட்டர் பால் என்பவரின் முதல் மனைவி ஹெலன் தனக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் பீட்டர் பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.