ஊரடங்கு முடிந்ததும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Pichaikkaran 2 Movie Update : தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் வசூலை பெற்றது. அதுமட்டுமல்லாமல் TRP-ல் பல ஆண்டுகள் அதிக பார்வையாளர்களை பெற்ற படமாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது.
இன்று வரைஎத்தனை முறை ஒளிபரப்பினால் யாருக்கும் சலிக்காத படமாக இருந்தாலும் இதன் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்பது பலரும் ஆசை.
அந்த ஆசை தற்பொழுது நிறைவேற உள்ளது. ஊரடங்கு கால இடைவெளியில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி செய்துள்ளாராம்.
அது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தான் என கூறப்படுகிறது. மேலும் அவர் இசை காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சசி இயக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இதனால் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடிப்பார் எனவும் எதிர்பார்க்கலாம்.
சூர்யாவின் அருவா என்னாச்சு?? எப்போ, எங்கே தொடங்குகிறது? – வெளியானது லேட்டஸ்ட் தகவல்.!
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் பிச்சைக்காரன் 2 திரைப்படம் எப்போது உருவானாலும் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்.