நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மீண்டும் பரபரப்பான பதிவை பதிவிட்டுள்ளார்.
Oviya Tweets About Bigg Boss : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த போதே உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால் இவர் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிகாக ஒருவரை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த பதிவில் ரசிகர்களுடனான விவாதத்தில் மேலும் சில பரபரப்பான பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.
எதிர்பாராத நேரத்தில் வெளியான வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு செம கொண்டாட்டம்!
அதாவது கான்ட்ராக்ட் பேப்பர் ஒன்னும் லைசென்ஸ் இல்லாத ஒருவரை தற்கொலை செய்ய தூண்ட.. நான் பிக்பாஸ் நிகழ்ச்சி தடை செய்ய வேண்டும் எனக் கூறவில்லை. நிகழ்ச்சியின் நடைமுறையில் தான் மாற்றம் வேண்டும் எல்லோரும் மனிதர்கள் தான் என கூறியுள்ளார்.
என்னையும் அந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது மனநிலை சரியில்லை என கூறினார்கள். தமிழ்நாட்டில் இன்னொரு சுசாந்த் இருக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட ரீதியாக இதனை தன்னால் எதிர்கொள்ள முடியாது. என்டோமால் சைன் போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து என்னால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.
அவர்களுக்கு நான் என்னுடைய கோரிக்கையை தான் வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.