os manian about seeman
os manian about seeman

நாகர்கோவில்: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட போது, நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம்(!?) என உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

அதை தொடர்ந்து, சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலில் பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவ்வாறு பேசியதை எதிர்த்து பல கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, தற்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிற மனிதர் தான் சீமான்” என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.