மாதவி போட்ட திட்டம், அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் அடுத்த அடுப்ப நீங்க பத்த வைங்க என்று சொல்ல அவர் இந்த வீட்டோட மகாலட்சுமி நீதான் பத்த வைக்கணும் என்று சொல்ல உடனே மாதவி மற்றும் சுரேகா இருவரும் அப்ப நம்ம யாரு என்று கேட்கின்றனர்.
உடனே மாதவி இன்னும் கொஞ்ச நேரத்துல அவ பத்த வச்ச பானை எப்படி வெடிச்சு சிதற போகுதுன்னு பாரு என்று சொல்ல அசோகன் மாடியில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருக்கிறார். மறுபக்கம் சூர்யாவிடம் அருணாச்சலம் எதுக்குடா அந்த பக்கமே இருந்த என்று கேட்க வந்த இடத்தில் இருந்து தானே கரெக்ட் என்று சொல்ல என்ன சத்தம் அது என சொல்லி மேலே வந்து பார்க்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
