மாஸ்டர் உட்பட பல திரை படத்தின் பணிகள் லாக் டவுனுக்கு பின் தற்போது தொடங்கியுள்ளன.
Master Post Production Work Update : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கி இருந்தது.
தற்போது தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு படத்தின் post-production வேலைகளை செய்து கொள்ளலாம் என தளர்வு அளித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் post-production வேலைகள் மீண்டும் தொடங்கி இருப்பதாக பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்க உள்ளது. அதேபோல் இந்தியன்2, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் வேலைகள் நேற்று தொடங்கியிருந்தன.
இன்று முதல் மாஸ்டர், டாக்டர், பென்குயின், கும்கி 2, பூமி, மூக்குத்தி அம்மன் மற்றும் சில சிறு பட்ஜெட் படங்களில் வேலைகளும் இன்று தொடங்க இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.