Edappadi Palanisamy Speech :
மதுரை: குடிநீர் பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:
சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு போய் கிடக்கின்றன.
ஒரு குடம் தண்ணீர் கூடக் கிடைக்காமல் தாய்மார்கள் குழாயடிகளில் காலிக்குடங்களுடன் வரிசையில் கால் கடுக்கப் பல மணி நேரம் காத்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் குடிநீர் பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கூட்டணி வேறு, கொள்கை வேறு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து!
அதை தொடர்ந்து, அண்ணா பல்கலை கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா பேசியிருப்பது தவறானது என்று கூறினார்.
பின்னர் நடிகர் கமல் குறித்து கேட்ட கேள்விக்கு, நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.