Corona Emergency Act in Tamil Nadu
Corona Emergency Act in Tamil Nadu

கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corona Emergency Act in Tamil Nadu : தற்போது கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. ஆனாலும் மக்கள் பலர் தொடர்ந்து எவ்வித பயமும் இல்லாமல் சமூக இடைவெளி இன்றி முக கவசம் அமையாமல் வெளியே சுற்றி திரிகின்றனர்.

ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை அள்ளிய சூர்யா.. சூரரைப்போற்று படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு தெரியுமா?? மிரண்டு போன திரையுலகம்!

இதனால் தமிழக அரசு இது போன்ற செயல்களை தடுப்பதற்காக அவசர சட்டம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள் மக்களே.