CM Meeting in Tirunelveli
CM Meeting in Tirunelveli

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

CM Meeting in Tirunelveli : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தென் தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுலா சென்றுள்ளார்.

நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மதுரை மாநகரத்தில் அதிமுக அரசு செய்துள்ள ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்து பேசினார்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அலுவலர்களிடம் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தளபதி சிக்ஸ்டி 5 பட்ஜெட் 140 கோடி.. அதிர்ச்சி கொடுத்த முருகதாஸ் – சன் பிக்சர்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி வி எம் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே கோபால், தொழில்துறை முதன்மைச் செயலாளர் திரு நா முருகானந்தம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி கே அருண் சுந்தர் தயாளன், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.