Bomb threat in IT Company :
சென்னை: சென்னையை அடுத்த கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள செக்யூரிட்டி அறையை தொடர்பு தொண்ட மர்ம நபர் ஒருவர் அந்நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டிதுள்ளார்.
இதனால் அங்கு பெரும் அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர்.
மேலும் உடனடியாக ஊழியர்கள் அனைவரையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த நிறுவனத்தின் 13 மாடிகளையும் அதிரடியாக சோதனையிட்டனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
“சுமார் 4 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி” என்பது தெரியவந்துள்ளது. மேலும் இன்று இந்த நிறுவனத்தில் கான்பிரன்ஸ் ஒன்று நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தொழில் போட்டி காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போனில் தொடர்பு கொண்ட மர்மநபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பதை அறிந்த பிறகு ஊழியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.. இச்சம்பவம் அங்கு உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.