தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil 3 Title Winner Details : கமல்ஹாசன் பங்கேற்று நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நாளை இந்த போட்டியின் வெற்றி போட்டியாளர் அறிவிக்கப்படவுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுமிதா, தர்ஷன், கவின், சேரன் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.
கவினுக்கு பதில் லாஸ்லியா என்னை அறையட்டும் – கவினை அறைந்த நண்பர் டிவிட்
தற்போது ஷெரின், லாஸ்லியா, முகேன், சாண்டி என 4 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள முகேனே வெற்றி போட்டியாளர் என கூறப்படுகிறது .
சாண்டி இரண்டாம் இடத்திற்கும், லாஸ்லியா 3வது இடத்திற்கும், ஷெரின் 4வது இடத்திற்கும் தேர்வு செய்யப்படவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
ஆனாலும், நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே இறுதியான வெற்றியாளர் யார் என்பது தெரிய வரும்.
முதல் சீசனில் ஆரவ்வும், 2வது சீசனில் ரித்விகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.