பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை.. அனுபமா பரமேஸ்வரன் வேதனை.!!

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முடியவில்லை என்று பேசியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இவரது நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவம் பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த நிலையில் மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மாரி செல்வராஜ் சார் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க அழைத்த போது பல தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை அந்த முடிவை எண்ணி நான் அதிகமாக வருத்தப்பட்டு இருக்கிறேன் மாமன்னன் படத்திலும் நடிக்க முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது தற்போது பைசன் படத்தில் நடிக்க அழைத்த போது அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த படத்தில் நடித்த ஒரு நடிகராக இந்த படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
