‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் பற்றி இயக்குநர் நம்பிக்கை..

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′ படத்திற்கான அப்பேட் கொடுத்துள்ளார். அதாவது, ‘நான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன். அது சவாலான விஷயமும் கூட. அப்படத்தை எடுக்க முடியாது என பலர் கூறுகின்றனர். எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’, என கூறியுள்ளார்.

இவர் தற்போது, சரத்குமார், சண்முகப் பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் அமரன், மதராசி, பராசக்தி என மாஸ் ஹீரோவாக வளர்ந்துள்ளார். இச்சூழலில் மீண்டும் பொன்ராமுடன் கூட்டணி உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

update on the film varuthapadatha valibar sangam 2
actor sivakarthikeyanstoryvaruthapadatha valibar sangam 2கொம்புசீவிசண்முகப் பாண்டியன்