‘சூர்யா-47’ படத்தின் கதை என்ன தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா, ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் 47-வது திரைப்படம் தயாராக இருப்பதாக அறிவிப்புகள வெளியாகிவிட்டன. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட ) நடைபெற்று முடிந்தது. தற்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குநர் ஜீத்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

சூர்யா 47 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
அதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களமாக பார்க்கையில், ஒரு சீரியஸான க்ரைம் ஒன்று நடந்துவிடுகிறது. அதனை எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதை ஒரு போலீஸ் டீம் விசாரணை செய்தால் எப்படி இருக்கும் என்பது தான் சூர்யா 47 படத்தின் ஒரு வரிக் கதை என கூறப்படுகிறது.

இப்படம் செம மாஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்கும். மேலும், சூர்யா இப்படத்தில் நெகட்டிவ் ஷெட் கலந்த ஹீரோவாக நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.

சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுவரை அவர் பல போலீஸ் ரோல்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாத்திரமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

actor suriyastoryVenky Atluriகாமெடிசூர்யா 47