கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..

பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பார்ப்போம்..

கேஜிஎஃப், சலார், காந்தாரா போன்ற மிகப்பெரிய படங்களை தயாரித்து மாபெரும் தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்துள்ள ஹோம்பல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமானார் சந்தோஷ் ஆனந்த்ராம். இவர் ஏற்கனவே ஹோம்பல் பிலிம்ஸ் தயாரிப்பில் படங்களை இயக்கி இருக்கின்றார். மேலும் இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராமை பின்தொடர்வதால் இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கணிக்கின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி படத்தை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் படத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.

கேஜிஎஃப் ,காந்தாரா போன்ற படங்களை தயாரித்த ஹோம்பில் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்தால் அவரின் மார்க்கெட் மேலும் உயரும். அவரின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்தியளவில் அப்படத்திற்கு ரீச் கிடைக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

sivakarthikeyan may team up with kantara1 producer
parasakthi movieSivakarthikeyanstoryகாந்தாராசிபி சக்கரவர்த்தி