பிளாக் மெயில் பண்ண ரோகினி, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.


siragadikka asai serial today episode update 14-11-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று சொல்ல ரோகினி வேண்டாம் என சொல்லி கெஞ்சுகிறார் மறுபக்கம் என்ன மீனாவையும் காணவில்லை என்று சொல்ல முத்து நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல பாட்டி நீ வேண்டாம் விஜயா போய் கூட்டிட்டு வரட்டும் என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் மீனா வெளியில் நின்று கொண்டிருக்கும் விஜயா வந்து இன்னொரு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன் என்று கேட்க குளத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது என்று சொல்லி சமாளிக்கிறார். உடனே ரோகினி எங்கே என்று கேட்க மீனா பார்க்க எதிரில் ரோகினி வருகிறார்.

ஆனால் மீனா ரோகினி பார்த்து முறைத்துக் கொண்டே இருக்க விஜய் ரோகினிடம் பாசமாக எங்கம்மா போயிருந்த வயிறு சரியில்லன்னு சொன்னாங்க இப்ப பரவாயில்லையா என்று கேட்டுவிட்டு அழைத்துச் செல்கிறார் பிறகு பூஜை தொடங்க மீனா ரோகினி பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறார் பிறகு தான் உண்மையை சொல்லக்கூடாது என்றும் அப்படி சொன்னான் நானும் க்ரிஷ் குளத்தில் விழுந்து தற்கொலை பண்ணிக்கொள்வோம் என்று சொல்லியதுதான் மீனா விஷயத்தை சொல்லாமல் இருப்பது தெரிய வருகிறது. பிறகு பூஜை நல்லபடியாக முடிய அனைவரும் ஆசீர்வாதம் வாங்குகின்றனர்.

பிறகு பாட்டி எனக்கு பேர பசங்க இருக்காங்க ஆனா பேத்திக இல்லை என்று நான் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன் ஆனா இப்ப எனக்கு மூணு பேத்தியின்னு இருக்காங்க என்று சந்தோஷமாக பேச அண்ணாமலை இதுக்கு மேல என் குடும்பத்துல என்னமா வேணும் சந்தோஷமா இருக்கிற பசங்க மருமகள் இருக்கிறது போதும் என்று சொல்ல மீனா ரோகினி பார்க்கிறார். பிறகு அங்கிருந்து அனைவரும் கிளம்ப பார்த்து மீண்டும் அந்த சிரித்துக் கொண்டிருந்த மர்ம நபர் வந்து சிரித்துக்கொண்டே இருக்க அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

உடனே இவ்வளவு நாளா வச்சிருந்த மூட்டை கிழிஞ்சு போயிடுச்சு என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைய மீனா ரோகினியை பார்க்கிறார். பூட்டி பூட்டி வச்ச ரகசியம் உடைந்து போயிடுச்சு ஒரு நல்ல மனசுக்கு கிட்ட ஒன்னு தெரிஞ்சு அது இப்போ மறைச்சி வச்சிருக்கு என்று சொல்லிவிட்டு இருக்க அண்ணாமலை தட்டில் பழங்களுடன் இருக்கும் ரவியிடம் இதில் ஏதாவது எடுத்துக்க சொல்லு என்று சொல்ல ஒரு பழத்தை எடுத்து மனோஜிடம் கொடுக்கிறார்.

எனக்கு எதுக்கு கொடுக்குற என்று கேட்க கையேந்த போவது நான் கிடையாது நீதான் என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் அந்த பழத்தை வாங்கிக் கொள்ள அவர் சிரித்து கொண்டே சென்று விடுகிறார். உடனே அண்ணாமலை முத்துவை வாழையிலை வாங்க அனுப்பிவிட்டு அனைவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர். ரோகினி அம்மா என்ன சொல்லுகிறார்?முத்து என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial today episode update 14-11-25

 

14-11-25episodeserialsiragadikka asaisiragadikka asai serial today episode update 14-11-25todayupdateசிறகடிக்க ஆசைமீனாரோகினி