நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநயா ஆனந்த். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சில வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் அறிவு, தனி ஒருவன், குற்றம் 23, தாக்க தாக்க போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இது மட்டுமில்லாமல் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். ஏற்கனவே 15 வருடமாக நண்பரை காதலித்து வருவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு நண்பருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.