கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் நடிகை குஷ்பூ.
தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90ஸ் களின் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ.இவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். படம் தயாரிப்பில் பிசியாக இருந்து வரும் குஷ்பூ தற்போது குஷ்பு புதிய சீரியல் ஒன்றிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனது கணவர் குறித்து பேசி உள்ளார்.
அதில் என் அன்பே முப்பது வருடங்களாக சினிமாவில் உங்களது அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடுகிறேன் உங்களை சந்தித்த முதல் தருணத்திலிருந்து உங்களிடம் ஒரு தீப்பொறி இருப்பதை உணர்ந்து கொண்டேன் 30 வருட சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து இருக்கிறீர்கள் என் வாழ்க்கையில் உங்களை துணையாக பெற்றது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.