சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு பற்றி விஜய் சேதுபதி அப்டேட்ஸ்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் எழுதுங்கள் என்றேன். அவர் ஒரு திறமையான இயக்குநர். அவருடைய அறிவும், அக்கறையும் ரொம்ப ஆழமாக இருக்கும்.

ஒருவருடன் பேசும்போதே நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றால், வேலை செய்யும்போது இன்னும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்வது என்பது சுகமான சந்தோஷம் தான். எத்தனை நாள் படப்பிடிப்பு என்பதெல்லாம் தெரியாது. அவர் கேட்டார், வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஜினி நடிப்ப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


i dont know about the character of arasan vijay sethupathi
actor simbuarasan movieVijay Sethupathiசிம்புவெற்றிமாறன்