ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு என்பது குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதாவது ஜெயிலர் 2 திரைப்படம் படையப்பா தொடர்பு தொடர்கிறது, மீண்டும் ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் மோதுவதாகவும் படத்தின் முதல் பாதி தீவிரமான குடும்ப நாடகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இரண்டாம் பாதியில் சிலை கடத்தல் பாதாள உலகம் கும்பல் பின்னணியில் நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான மாஸ் ஏற்றம் தரும் ஆக்சன் மசாலா படமாகவும் உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் சிவாண்ணா மற்றும் மோகன்லால் போன்ற பல சிறப்பு தோற்றங்கள் இருக்கும் நிலையில் மாசான பிளாஷ்பேக் தருணங்களும் இணைக்கப்பட்டு இருப்பதால் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கின்றனர்.
நெல்சன் ஒரு முழுமையான வலுவான திரைக்கதையை வழங்கியுள்ளார் மகனின் இழப்பு மற்றும் தலைவர் ரஜினிகாந்தின் முடிவுகளை சுற்றி தீவிரமான உணர்ச்சிகரமான குடும்ப நாடகத்தின் பகுதிகள் மற்றும் அதே நேரத்தில் அதிரடி காட்சிகள் என வலுவான திரைக்கதையாக ஆதரிக்கப்படுகின்றன இது ஒரு முழுமையான மகா ஆக்ஷன் காமெடி குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ஆக உருவாக்கியுள்ளது.
இந்தத் திரைப்படம் ஜெயிலர் படத்தின் அதே செண்டிமெண்ட் உடன் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா படம் குறித்த இந்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.