ஜெயிலர் படத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை என இயக்குனர் ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 635 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவலும் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தில் இரண்டாவது பாகம் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தின் நெருங்கி வருகிறது.
நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குனரான ராஜகுமாரன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ராஜகுமாரன் ஜெய்லர் படத்தை பார்த்ததாகவும் அது கொடுமையாக இருந்ததாகவும் பாதிப்படையத்திலேயே ஓடி வந்துடலாம் போல இருந்தது.. சகிக்க முடியல இதுல வேற 600 கோடி வசூல் பண்ணுதுன்னு சொல்றாங்க இதில் பார்ட் 2 வேற எடுக்குறாங்க அந்த படத்தின் மூலம் ரஜினி மக்களுக்கு என்ன சொல்லிவிட்டார் பணம் வர வேண்டும் சம்பளம் வரவேண்டும் என்பதற்காக படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கார் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.