ஜாக்லின் மற்றும் மஞ்சரிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggbosstamil 8 day 58 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வேலை செய்யாமல் இருக்கும் போட்டியாளர் யார் என்று கேள்வி வருகிறது. அதற்கு தர்ஷிகா ராணவ் என்று சொல்லுகிறார். பிறகு வேலை செய்வது போல் நடிப்பவர்கள் யார் என்று கேட்க மஞ்சரி சௌந்தர்யாவை சொல்லுகின்றனர்.

OP அடிக்கிறது யாருன்னா மஞ்சரி என்று சௌந்தர்யா சொல்லுகிறார். உடனே பவித்ரா முத்து போட்ட கோட்டுல அப்படியே போகுது மஞ்சரி என்று சொல்ல எந்த விஷயத்துக்கு போயிருக்கும்னு சொல்லுங்க என்று முத்து கேட்கிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்லின் மற்றும் மஞ்சரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட நடுவில் சௌந்தர்யா வருகிறார். சௌந்தர்யா நீங்கதாங்க உங்க தலையை நடுவுல விடுறீங்க என்று கேட்க அதற்கு மஞ்சரி, நீங்க எல்லாம் ஜாலியா பேசுற மாதிரி பேசாதீங்க சௌந்தர்யா என்று கேட்கிறார். நாங்க எங்களுக்குள்ள பேசிக்கிறோம் ஆனா நீங்க செவுற ஒடச்ச நீ உள்ள வர மாதிரி எதுக்கு வரீங்க என்று கேட்க நல்லா இருக்கு பண்ணு என்று சொல்லிவிட்டு மஞ்சரி கிளம்புகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggbosstamil 8biggbosstamil 8 day 58 promo 2day 58latestnewsManjaripromo 2soundaryavijaysethupathyvijaytvஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசௌந்தர்யாபிக் பாஸ்மஞ்சரிவிஜய் டிவி