சாச்சனா மற்றும் ஹன்ஷிதா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் இன்று இரவு அவங்களுக்கு கூப்பிட்டு என்னை ஏதுன்னு அன்பா விசாரிப்போம் என்று சொல்கிறார். போட்டியாளர்கள் போனவாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்பதை அவர் கூறியது மட்டுமில்லாமல் இன்னும் அவர்கள் அதிகமாக விளையாட வேண்டும் என்பதை உணர்த்த உள்ளதாக சொல்கிறார்.
அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாச்சனா மற்றும் ஹன்ஷிதா வாக்குவாதம் குறித்து விஜய் சேதுபதி கேள்வி கேட்க சாச்சனா கண்கலங்கி அழுகிறார்.
இந்தப் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.