அஜித் சாருடன் நடிக்கப் போகும் முன், அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடன் பணியாற்றிய பிறகு அவர் எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதை உணர்ந்தேன்.
அவர் உடன் பணியாற்றும் கலைஞர்களை எப்போதும் ஊக்குவிக்கும் விதத்தில் நடந்து கொள்வார், குறிப்பாக பெண்களிடம் அதிக அக்கறையுடன் இருப்பார். ஒரு பெண்ணாக இந்தத் துறையில் அது எனக்கு மிகவும் நல்ல உணர்வை அளித்தது.
ஒரு நாள் அவர் தானாகவே வந்து, “நேற்று எல்லோருக்கும் மட்டன் செய்து கொடுத்தேன்… இன்று மதிய உணவுக்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது.
அவரே முன்வந்து அனைவரிடமும் பேசி, சூழலை இயல்பாக மாற்றிவிடுவார். இப்படிப்பட்ட உயர்ந்த நடிகர் இவ்வாறு நடந்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல.
இவ்வாறு, சமீபத்திய ஒரு நேர்காணலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அஜித் குமார் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.