திருமணத்திற்கு என்ன அவசரம் என்று பேசியுள்ளார் நடிகை சதா.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சதா.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் சதா சினிமாவை விட்டு ஒதுங்கி புகைப்படக் கலைஞராக மாறி காட்டுக்குச் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார் இந்த நிலையில் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதாவது திருமணத்தின் மீது எனக்கு ஆசை இல்லை புகைப்படத்துறையில் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். அதன் பிறகு பார்க்கலாம்.காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் எதற்கு அவசரம் என்று கேட்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.